உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை

சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்!

News image

https://cbi.gov.in/

Updated On :7 ஜனவரி 2025, 2:09 pm IST

புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள விசாரணை முகமைகளால், தேடப்படும் குற்றவாளிகள் உள்பட அனைத்து குற்றவாளிகளின் விபரங்களை சிபிஐ வடிவமைத்துள்ள ‘பாரத்போல்’ தளத்தில் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இன்று(ஜன. 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பாரத்போல்’ தளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன்மூலம், குற்ற விசாரணையில் தேவைப்படும் ஒத்துழைப்பையும் உதவியையும் எளிதில் பெற்று விசாரணையை விரைந்து முடிக்க பயனுள்ளதாக இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச காவல்துறையான ‘இண்டர்போல்’ மூலம் தேவையான உதவியையும் ஒத்துழைப்பையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடுவிட்டு நாடு எல்லைகளைக் கடந்து அரங்கேறக்கூடிய இணையவழி மோசடி குற்றச் செயல்கள், நிதி மோசடிகள், கடத்தல் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல், பெண்கள், மனித உறுப்புகள், விலங்குகள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை பெற்று குற்றவாளிகளை எளிதில் கண்டறிய ‘பாரத்போல்’ தளம் உதவிகரமாக இருக்கும்.

குற்ற வழக்குகளில் விசாரணை குறித்த தகவல்களையும் நிலவரங்களையும் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் மற்றும் மின்னஞ்சல், தந்தி வடிவில் பெற்று அதன்பின் விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் நடைமுறைக்கு மாற்றாக மேற்கண்ட விவரங்களை டிஜிட்டல் வடிவில் பெற்று விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.