/

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image

சிவராஜ் சிங் செளஹான் - (கோப்புப் படம்)

Updated On :18 ஜனவரி 2025, 4:07 pm IST

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் புதிய பாஜக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

விரைவில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும். பூத் அளவிலான தலைவர்களுக்கான தேர்தலையும் நடத்துகிறோம்.

சில சமயங்களில் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தற்போது கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா பதவி வகித்து வருகிறார்.

இவர் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் ஆவார்.

இதனிடையே விஜயேந்திராவுக்கு பாஜக தலைவர்களில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.