முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவிருப்பதாக தகவல்...

News image

மன்மோகன் சிங், ரத்தன் டாடா

Updated On :23 ஜனவரி 2025, 8:24 am IST

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. நாட்டுக்காகச் சேவையாற்றுபவர்களைப் பாராட்டு விதமாக வழங்கப்படும் இந்த விருது இதுவரை 53 பேர் பெற்றுள்ளனர்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருது 1954-இல் அறிமுகமானது. வாழ்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தொடங்கப்பட்ட விருதளிப்பு, 1955-இல் மறைந்தவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

ஓர் ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு 5 பேருக்கு வழங்கப்பட்டது.

குடியரசு நாளையொட்டி, ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பாரத ரத்னா விருது பெறுபவர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் வெளியிடுவார்.

இந்த நிலையில், கடந்தாண்டு மறைந்த ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மறைந்தபோது பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

மேலும், மறைந்த சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஹிந்துத்துவ சித்தாந்தவாதி சாவர்க்கர், கல்வியாளர்கள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே, பிகாரின் முதல் முதல்வர் ஸ்ரீ கிருஷ்ணா சிங், ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியோரின் பெயர்களையும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்தாண்டு மூன்று அல்லது நான்கு நபர்களின் பெயர்களை பாரத ரத்னா விருதுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.