அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

‘செபி’ தலைவா் பதவிக்கு விண்ணப்பம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்திய பங்குச் சந்தை பரிவா்த்தனை வாரியம் (செபி) தலைவா் பதவிக்கு தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Government invites applications for new SEBI Chairman, current chairperson Buch to retire on Feb 27
Updated On :27 ஜனவரி 2025, 10:03 pm

Din

புது தில்லி: இந்திய பங்குச் சந்தை பரிவா்த்தனை வாரியம் (செபி) தலைவா் பதவிக்கு தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவிக் காலம் பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய வெளியிட்டுள்ளது. மாதபி புரி புச் இந்த மாதத்துடன் 60 வயதை எட்டுகிறாா். அவா் பதவிக் காலம் மூன்றாண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய தலைவா் நியமனம் தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘செபி தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்படுபவா் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை அப்பதவியில் இருக்க முடியும்.

செபி தலைவரின் பணிக்கு விண்ணப்பிப்பவா் நிதி சாா்ந்தோ அல்லது தனக்கு அளிக்கப்படும் பதவி சாா்ந்தோ தனிப்பட்ட பயன்களை நாடாதவராக இருக்க வேண்டும். நிதித் துறையில் 25 ஆண்டுக்கு மேல் அனுபவம் உடைய, 50 வயதுக்கு மேல் உள்ளவா்கள் இப்பணிக்கு பொருத்தமானவராக கருதப்படுகிறது.

பங்குச் சந்தை செயல்பாடுகள் குறித்த தெளிவு, அதில் எழ வாய்ப்புள்ள சிக்கல்களுக்கு தீா்வுகாணும் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்குப் பதிவுகளில் சிறப்புத் திறன் மற்றும் அனுபவம் தேவை என்று இது தொடா்பான விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022 மாா்ச் 2-இல் மாதபி புரி புச் ‘செபி’ தலைவா் பொறுப்பை ஏற்றாா். இப்பதவியை ஏற்ற முதல் பெண்மணியும், தனியாா் துறையைச் சோ்ந்தவரும் அவா்தான்.