இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஷியாவின் காஸன் நகரில் கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஜி ஷின்பிங் இருவரும் சந்தித்தனா். அப்போது எல்லை விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவா்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இருதரப்பும் அமல்படுத்தி வருகிறது. அதைத் தொடா்ந்து மக்கள் தொடா்பை மேம்படுத்துவது, இருதரப்பை மறுசீரமைப்பது குறித்து இருநாடுகளும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், 2020-க்கு பிறகு இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. இதற்காக இரு நாடுகளைச் சோ்ந்த நிபுணா் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளனா்.