ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா, வளர்ந்த இந்தியாவுக்கான மதிப்பீடுகள் குறித்து உரையாற்றினார்.
இதையும் படிக்க : பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரமே அதிகம்: சசி தரூர்
அவர் பேசியதாவது:
“ஒவ்வொரு சமூகமும் தனித்தனி அமைப்பை உள்ளடக்கியது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்று நினைக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஒத்த பார்வைகளைக் கொண்டவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை பொதுக்கல்வியில் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கின்றனர்.
கலாசாரமும் அதன் மதிப்பீடுகளும் கல்வி வழியாகவே புகுத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். இது பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல, குடும்பம், சமூகத்திலிருந்தும் செய்யப்பட்டன.
இந்தியாவுக்கான தனித்துவமான கண்ணோட்டத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அரசியல், நீதித்துறை, தொழில்துறைகளில் இது இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்.
நான் ஆங்கிலம் அல்லது ஹிந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்தியை ஒரு பிரசாரமாக எதிர்ப்பது நாட்டுக்கு நல்லதல்ல. யாரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் உறுப்பினர்களை குறைந்தது இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இப்போது அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாய் மொழி, பிராந்திய மொழி மற்றும் ஒரு தொழில் மொழி” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராடும் மாணவர்கள் 'தேச விரோதிகளா'? - மோடி அரசுக்கு சோனியா காந்தி கேள்வி

சென்னை ஐஐடி பாடநெறி பயிற்சி திட்ட சோ்க்கை பதிவு ஆக. 6 வரை நீடிப்பு
ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
தமிழக தலைமைச் செயலர் சாய் குமாரின் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



