குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஹிந்தி கற்க கட்டாயப்படுத்த முடியாது, ஆனால்...: ஆர்எஸ்எஸ் இணைச் செயலர்

கல்விச் சிந்தனை அரங்கில் ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா பேசியது...

News image

ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். - express

Updated On :27 ஜனவரி 2025, 3:26 pm IST

ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா, வளர்ந்த இந்தியாவுக்கான மதிப்பீடுகள் குறித்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“ஒவ்வொரு சமூகமும் தனித்தனி அமைப்பை உள்ளடக்கியது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்று நினைக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஒத்த பார்வைகளைக் கொண்டவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை பொதுக்கல்வியில் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கின்றனர்.

கலாசாரமும் அதன் மதிப்பீடுகளும் கல்வி வழியாகவே புகுத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். இது பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல, குடும்பம், சமூகத்திலிருந்தும் செய்யப்பட்டன.

இந்தியாவுக்கான தனித்துவமான கண்ணோட்டத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அரசியல், நீதித்துறை, தொழில்துறைகளில் இது இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்.

நான் ஆங்கிலம் அல்லது ஹிந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்தியை ஒரு பிரசாரமாக எதிர்ப்பது நாட்டுக்கு நல்லதல்ல. யாரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் உறுப்பினர்களை குறைந்தது இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இப்போது அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாய் மொழி, பிராந்திய மொழி மற்றும் ஒரு தொழில் மொழி” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.