ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வட இந்தியாவில் கடுங்குளிர்: மக்கள் அவதி!

தில்லியில் அடா் மூடுபனி...

News image

PTI

Updated On :28 ஜனவரி 2025, 4:35 am

DIN

புது தில்லி : தில்லி உள்பட வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தலைநகர் புது தில்லியைப் பொறுத்தவரை, கடந்த 4 நாள்களில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குளிர் சீதோஷ்ணம் நிலவுகிறது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. பிப். 1-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் காற்றுத் தரக் குறியீடு 258 ஆக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணாவில் இன்று குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வட எல்லையான ஜம்மு காஷ்மீரிலும் உறைபனி வெப்பநிலை வாட்டுகிறது; குளிர் அலையும் வீசுகிறது. ஸ்ரீநகரில் -4.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.