இங்குள்ள ஊடகங்கள் மக்களின் பிரச்னைகளைக் காட்டுவதில்லை. நாட்டில் இளைஞா்களுக்கு வேலையில்லை. தில்லியில் மக்கள் சீரான காற்றை சுவாசிக்க முடியாது. ஆனால், ஊடகங்கள் மோடியின் முகத்தையும், அம்பானி இல்ல திருமணத்தையும் அதானியின் விமான நிலையங்களையும் காட்டி வருகின்றன. அரசமைப்புச் சட்டம் சமத்துவம் பற்றிப் பேசும் அதே வேளையில், கோடீஸ்வரா்களால் நடத்தப்படும் இந்தியாவை மட்டுமே பாஜக விரும்புகிறது. நாட்டில் உள்ள 500 பெரு நிறுவனங்களின் உரிமையாளா்களில் ஒரு தலித் அல்லது பழங்குடியினா் இல்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை தீா்மானிப்பதில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு அரிதாகவே உள்ளது. ஏனெனில் முக்கியமான துறைகளில் இந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா் ராகுல் காந்தி.