எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் வந்தது: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image

கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் - PTI

Updated On :29 ஜனவரி 2025, 5:56 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையான இன்று (ஜன. 29) திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் எதிர்பாராத விதமாக அதிகாலை கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் அதிகமான பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,

''இன்று மெளனி அமாவாசை. இதனையொட்டி சுமார் 8 - 10 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வந்துள்ளனர். நேற்று 5.5 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இன்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்ததால் திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தடுப்புகளைத் தாண்டி சிலர் குதிக்க நேர்ந்தபோது பக்தரக்ள் படுகாயம் அடைந்துள்ளனர். மெளனி அமாவாசை தொடங்கியதுமே கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அதிகாலை 1 மணியளவில் இருந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நிலையைமைக் கண்காணித்து வருகிறார். காலையில் இருந்து 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஆளுநர் அன்னாபென் ஆகியோர் நிலைமை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. அவர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் உள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், கூட்ட அளவில் மாறுபாடு ஏற்படவில்லை. அகோரிகளிடமும் பேசியுள்ளேன். முதலில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து அகோரிகள் நீராடுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.