விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

மகாராஷ்டிரத்தைத் தாக்கும் ஜிபிஎஸ் நோய் பற்றி..

News image

ஜிபிஎஸ் நோய்

Updated On :30 ஜனவரி 2025, 8:18 am

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும். இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் சோலாப்பூரில் ஒருவர் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், புணேவின் சின்ஹாகாட் சாலையைச் சேர்ந்த 56 வயது பெண் இந்த நோய்க்கு பலியாகியுள்ளார். ஜிபிஎஸ் நோய்க்கு பலியான இரண்டாவது நபர் இவராவார். இதையடுத்து ஜிபிஎஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 வயது நபருக்கு திடீரென மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.