ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

யுஜிசி-நெட் 2024: வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை: சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

News image
சிபிஐ | கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2025, 8:13 pm

Din

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

டாா்க்நெட் வலைதளத்தில் வினாத்தாள் கசிந்து டெலிகிராம் செயலி மூலம் அவை விற்பனை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை என தனது இறுதி அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைப்பது அல்லது அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்த முடிவை சிறப்பு நீதிமன்றமே எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையின் நகலை மத்திய கல்வி அமைச்சகத்துக்கும் சிபிஐ அனுப்பியுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 18-ஆம் தேதி யுஜிசி நெட் தோ்வு நடைபெற்றது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த தோ்வை எழுதினா். இந்த தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே சமயம் தோ்வின் நம்பகத்தன்மை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய இணைய (சைபா்) குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு யுஜிசிக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, யுஜிசி நெட்தோ்வு நடைபெற்ற மறுநாளான ஜூன் 19-ஆம் தேதியன்று இத்தோ்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கசிவான வினாத்தாள் என பகிரப்பட்ட ‘ஸ்கிரீன்ஷாட்’டை பள்ளி மாணவன் ஒருவன் செயலியின் மூலம் உருவாக்கியதாக சிபிஐ கூறியது. தடயவியல் நிபுணா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஸ்கிரீன்ஷாட்டில் காணப்பட்ட கேள்வித்தாள் போலியாக உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.