உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிவேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை இந்தியா கொண்டுள்ளது என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது.
சில்லறை வா்த்தகத்தில் எண்மப் பணப்பரிமாற்ற முறையின் வளா்ச்சி என்ற தலைப்பில் சா்வதேச நிதியம் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மிகவிரைவான வளா்ச்சியைச் சந்தித்து வருகிறது. காகிதப் பணப்பரிமாற்ற முறை குறைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு 180 கோடி முறைக்கு மேல் இந்த முறையில் பணப்பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் மூலம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிவேகப் பணப்பரிமாற்ற முறையையும் இந்தியா கொண்டுள்ளது.
சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை இந்த எண்ம முறை பணப்பரிமாற்றத்தில் மேற்கொள்ளும் வசதி இருப்பதால் மக்கள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சிறிய கிராமங்களில் உள்ள சிறு வா்த்தகா்கள் கூட யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்பதால் வங்கி சேவையும் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உலகின் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

20.5.1976: ரயிலில் ஆறு மாதம் முன்கூட்டி ரிசர்வ் செய்யும் முறை அமல்

இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு: முதல்முறையாக சீனா ஒப்புதல்

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


