கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் ஒருவா், மனநல ஆலோசனைக்காக பெண் மனோதத்துவ நிபுணரை அழைத்துள்ளாா். அதன்பேரில் அக்கல்வி நிறுவனத்துக்கு அந்தப் பெண் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு தரப்பட்ட பானத்தை குடித்தபின், அந்தப் பெண் சுயநினைவை இழந்தாா்.
அவா் மீண்டும் விழித்து எழுந்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்தப் பெண் உணா்ந்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தப் பெண் மிரட்டப்பட்டாா். இதுதொடா்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடா்ந்து அந்த மாணவா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே கைது செய்யப்பட்ட மாணவா் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பாக சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
அவரை ஜூலை 19 வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். தென்மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த உதவி ஆணையர் தலைமையில் இந்த குழு செயல்பட உள்ளது.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, டிஜிட்டல் மற்றும் தடயவியல் ஆதாரங்களைப் பெறுவது விசாரணையின் முக்கிய நோக்கமாக இருக்கும். தடயவியல் குழுக்கள் ஏற்கெனவே சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, முழு வளாகத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஐஐஎம் அதிகாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது என்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவா் அண்மையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த பிரச்னை அடங்குவதற்குள் தற்போது புகழ் பெற்ற ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Police have constituted a nine-member special investigation team (SIT) to probe into the alleged rape of a woman by a student at the Indian Institute of Management-Calcutta, officials said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது
உ.பி.யில் கல்லூரி மாணவிக்கு காபியில் மயக்க மருந்து கலந்தளித்து 3 நாள்கள் வீட்டில் பூட்டி பாலியல் வன்கொடுமை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



