பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர்.
பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் மின்னல் பாய்ந்து மாநிலத்தில் 33 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய அதிக மழை இன்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகாரில் மின்னல் பாய்ந்து 2024-ல் 243 பேரும் அதற்கு முந்தைய ஆண்டு 275 பேரும் பலியாகினர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
Summary
The deaths in Bihar occurred during fierce storms between Wednesday and Thursday, a state disaster management department statement said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


