சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்க மொழி பேசும் மக்களின் பாதுகாப்பில் மமதா ஆர்வமாக உள்ளாரா?

News image

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Updated On :18 ஜூலை 2025, 7:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

முஸ்லிம்-வங்காளிகளுக்காக அவர் அஸ்ஸாமுக்கு வந்தால், அஸ்ஸாமிய மக்களும் இந்து-வங்காளிகளும் அவரை விட்டுவைக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.

மமதா பானர்ஜி வங்கதேசத்தினரை விரும்புகிறாரா அல்லது முஸ்லிம்-வங்காளிகளை மட்டும் விரும்புகிறாரா? முஸ்லிம்-வங்காளிகள் மட்டும் விரும்புகிறார் என்பதே எனது பதில். அரசியல் இலக்குகளை அடைய பாஜக மொழியியல் அடையாளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் சமீபத்திய குற்றச்சாட்டு குறித்து சர்மா விமர்சித்துள்ளார்.

வங்க மொழி பேசும் மக்களின் பாதுகாப்பில் பானர்ஜி ஆர்வமாக உள்ளாரா? அவர் ஏன் தனது மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தவில்லை?

டிசம்பர் 31, 2014-க்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முறையில் இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் 2019 வழி வகுக்கிறது.

வங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாமிய சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், மதம் மற்றும் அனைத்து அம்சங்களும் இங்குப் பாதுகாக்கப்படுவதாகவும் சர்மா கூறினார்.

அஸ்ஸாமில் வங்காள இந்துக்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் அஸ்ஸாமிய நிலப்பரப்பில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்பதை மமதா உணர வேண்டும்.

வங்காள-இந்துக்கள் தங்கள் மொழியில் பேசுகிறார்கள், தங்கள் மதத்தை அவர்களின் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் இங்கே பின்பற்றுகிறார்கள் என்று அவர் கூறினார், மேலும் வங்க மாநிலத்தில் இணை அதிகாரப்பூர்வ மொழி மற்றும் பராக் பள்ளத்தாக்கில் அதிகாரப்பூர்வ மொழி. இங்கு வங்காளிகளுக்கும் அஸ்ஸாமியர்களுக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களும் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோரைச் சட்டவிரோத வங்காளதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்கள் என்று முத்திரை குத்தி திட்டமிட்டுக் குறிவைப்பதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

Summary

Assam Chief Minister Himanta Biswa Sarma has alleged that his West Bengal counterpart Mamata Banerjee is only concerned about Bengali-speaking Muslims.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.