25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் கொன்ற நக்சல்கள் !

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
சத்தீஸ்கரில் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரா்கள்.
Updated On :21 ஜூலை 2025, 7:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, பலியானவர்கள் சுத்வாய் கிராமத்தைச் சேர்ந்த கவாசி ஜோகா (55), படா டாரெம் கிராமத்தைச் சேர்ந்த மங்லு குர்சம் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இரவு டாரெம் காவல் நிலையப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இந்தக் கொலைகள் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இந்த சம்பவத்துடன், பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 27 பேர் மாவோயிஸ்டுகள் வன்முறையில் பலியாகியுள்ளனர்.

கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி பிஜாப்பூரில் உள்ள ஃபர்சேகர் பகுதியில் 2 தற்காலிக ஆசிரியர்களும், ஜூன் 21 ஆம் தேதி, பிஜாப்பூரில் உள்ள பாமேட் காவல் நிலையப் பகுதியில் இரண்டு கிராமவாசிகளும் நக்சல்களால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Two men have been killed by Naxalites in different villages of Chhattisgarh's Bijapur district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.