கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் கொன்ற நக்சல்கள் !

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Naxalites kill two men in Chhattisgarh's Bijapur

சத்தீஸ்கரில் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரா்கள்.

Published On :21 ஜூலை 2025, 12:47 pm IST

சத்தீஸ்கரில் கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, பலியானவர்கள் சுத்வாய் கிராமத்தைச் சேர்ந்த கவாசி ஜோகா (55), படா டாரெம் கிராமத்தைச் சேர்ந்த மங்லு குர்சம் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இரவு டாரெம் காவல் நிலையப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இந்தக் கொலைகள் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இந்த சம்பவத்துடன், பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 27 பேர் மாவோயிஸ்டுகள் வன்முறையில் பலியாகியுள்ளனர்.

கிராம மக்கள் இருவரைக் நக்சல்கள் கொன்ற சம்பவம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி பிஜாப்பூரில் உள்ள ஃபர்சேகர் பகுதியில் 2 தற்காலிக ஆசிரியர்களும், ஜூன் 21 ஆம் தேதி, பிஜாப்பூரில் உள்ள பாமேட் காவல் நிலையப் பகுதியில் இரண்டு கிராமவாசிகளும் நக்சல்களால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Two men have been killed by Naxalites in different villages of Chhattisgarh's Bijapur district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.