தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்தி நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்தி! -ராகுல் காந்தி

News image

PTI

Updated On :25 ஜூலை 2025, 5:48 pm IST

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்தியாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(ஓபிசி) தலைமைத்துவ மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: “இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்தியாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குகிறார்கள். ஆனால், இந்த மக்களுக்கு அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. ஓபிசி பிரிவினரின் வரலாற்றை ஆர்எஸ்எஸ், பாஜக அழித்துவிட்டது.

தெலங்கானாவில் எந்தவொரு ஓபிசி, தலித், பழங்குடியினரும் கார்ப்பரேட் நிறுவனம் அளவுக்கு சம்பளம் பெறவில்லை. அவர்கள் எல்லாம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாதிருந்ததற்கு நானே முக்கிய காரணம், அதற்கு காங்கிரஸ் பொறுப்பாகாது. இந்தநிலையில், காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு விரிவாக எடுக்கப்படும்.

ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் சில காலம் நான் பின்தங்கிவிட்டேன். அதற்கான முக்கியத்துவத்தை அளிக்காமல் விட்டுவிட்டேன். இதற்காக வருந்துகிறேன். நாட்டின் ஆக்கப்பூர்வ சக்திகளுக்கு மரியாதை தர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்றார்.

Summary

OBCs, Dalits, tribals are country's productive force, but they are not getting fruits of their labour: Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.