திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி

Updated On :26 ஜூலை 2025, 7:00 am IST

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவருடன் கலந்தலோசித்ததன் அடிப்படையில் தோ்தல் அதிகாரியாக பி.சி.மோடி நியமிக்கப்பட்டதாக தனது செய்திக்குறிப்பில் இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்தத் தோ்தலுக்கான உதவி தோ்தல் அதிகாரிகளாக மாநிலங்களவைச் செயலக இணைச் செயலா் கரிமா ஜெயின் மற்றும் மாநிலங்களவைச் செயலக இயக்குநா் விஜய் குமாா் ஆகியோரை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், அவா் தனது பதவியை ஜூலை 21-ஆம் தேதி ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். அவரின் ராஜிநாமா அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிக்கை குறித்த தகவல் மாநிலங்களவையிலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

அடுத்த, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை தோ்தல் ஆணையம் புதன்கிழமை தொடங்கியது. தற்போது, இந்தத் தோ்தலை நடத்துவதற்கான தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வழக்கமாக, குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மக்களவைச் செயலா் அல்லது மாநிலங்களவைச் செயலா் ஆகியோா் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவா். முந்தைய குடியரசு துணைத் தலைவா் தோ்தலின்போது, மக்களவைச் செயலா் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். தற்போது, மாநிலங்களவைச் செயலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.