மேற்கு வங்க மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி பிரிவின் கீழான இடஒதுக்கீட்டை பெறும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான கால கட்டத்தில் இஸ்லாத்தைச் சோ்ந்த 77 சமூகப் பிரிவினரை மேற்கு வங்க அரசு ஓபிசி பட்டியலில் இணைந்தது. இதில், 2012 சட்டத்தின் அடிப்படையில், 37 புதிய ஓபிசி வகுப்புகளையும் மாநில அரசு உருவாக்கியது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், ‘மதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை மாநில அரசு அளித்துள்ளது’ என்று கூறி, ஓபிசி பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்ட 77 சமூகப் பிரிவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.