நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயின் நாடாளுமன்ற உரை, அவர் பாகிஸ்தானின் சார்பாக செயல்படுவதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
கோகோயின் மனைவி, இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால், அவர் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று சர்மா குற்றம் சாட்டினார்.
அவரால் அஸ்ஸாமுக்கு அவமானம், இந்தியர்கள் என்ற பெருமைக்குத் துரோகம் செய்தவர் அவர் என்று கூறினார்.
திங்களன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதல் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கோகோய் விமர்சித்தார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அரசு மௌனம் காத்து வருவதையும், 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலின் அடிப்படை மூலத்தையும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, முதல்வர் ஹிமாந்தா கோகோயை பல மாதங்களாகத் தாக்கி வருகிறார்.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma on Tuesday claimed that Congress MP Gaurav Gogoi's speech in Parliament "proved beyond doubt that he acts on behalf of Pakistan".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!

அஸ்ஸாமில் பின்தங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள்!

அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: வாக்களித்தார் கௌரவ் கோகோய்!

அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



