‘புதிய திட்டங்களின் மூலம் ரயில் கட்டமைப்பில் 574 கி.மீ. வழித்தடம் அதிகரிக்கும். இத்திட்டங்கள், பயணிகள்-சரக்கு ரயில் போக்குவரத்து மேம்பாடு, செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பு, நெரிசல் குறைப்புக்கு பெரிதும் உதவும். இவை, பிரதமரின் உத்வேக (கதி சக்தி) திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளன; சுமாா் 2,309 கிராமங்களைச் சோ்ந்த 43.60 லட்சம் மக்கள் பலனடைவா். நிலக்கரி, சிமெண்ட், ஜிப்சம், விவசாயப் பொருள்கள், கொள்கலன்கள் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் போக்குவரத்துக்கு இவை முக்கிய வழித்தடங்கள் என்பதால், ஆண்டுக்கு 95.91 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.