சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் காருக்கு பதிவு எண் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்.

News image

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் - ENS

Updated On :31 ஜூலை 2025, 5:19 pm IST

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அயோத்தி வழக்கு, அரசியலமைப்பின் 370-வது பிரிவு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் ஓய்வு பெற்றும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில் டி.ஒய்.சந்திரசூட் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அவர் கேட்டுள்ள குறிப்பிட்ட பதிவு எண்ணை வழங்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு அந்த எண்ணை விரைவாக ஒதுக்கீடு செய்து அவருக்கு தகவல் தெரிவித்தால் நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கடிதம் ஜூலை 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

SC registrar writes to transport commissioner seeking specific number for ex-CJI Chandrachud's car

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.