
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கெக்ரி பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வயதான பெண், மகள், மருமகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
பிரேமா தேவியின் வீட்டில் அவரது மகள் மாயா(45) மருமகன் கன்வர்பால்(50) ஆகியோர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கன்வர்பால் புதிதாகக் கட்டப்பட்ட சுவரில் குழாய் மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது, மேலே செல்லும் மின்சாரக் கம்பியில் தண்ணீர் பட்டது. அந்த அதிர்வில் அருகில் செங்கற்களை அடுக்கிவைத்திருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தார். மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
பிரேமா தேவியின் இரண்டாவது மகள் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.