சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இதனைத் தொடர்ந்து, அந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட ராணுவ முகாமிலிருந்த 3 வீரர்கள் பலியான நிலையில் 6 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 10) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், நேற்று (ஜூன் 9) மீட்புப் படையினர் ராணுவ வீரரான பி.கே. சையினுதீன் என்பவரது உடலை மீட்டனர்.
இதன்மூலம், மாயமான 6 பேரில், மூவரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், இந்திய விமானப் படை, ராணுவப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு
தெரியுமா?

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


