மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஏர் இந்தியா விமான விபத்து: 1.39 மணிக்கு வந்த அவசர அழைப்பு?

ஏர் இந்தியா விமான விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

விபத்துப் பகுதி

-

Updated On :12 ஜூன் 2025, 9:26 am

DIN

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்திலிருந்து மதியம் 1.39 மணிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த கேப்டன் சுமீத் சபர்வால் என்றும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்திலிருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 1.39 மணிக்கு ஆபத்து குறித்த அழைப்பு வந்த சிலி வினாடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஏர் இந்தியா விமான விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் கரும்புகை சூழந்துள்ளது. விமானம் விழுந்த வேகத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதியை தீப்பற்றி எரிந்தது.

சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்து வருகிறார்கள்.

விமான விபத்து

விமான விபத்து

குஜராத் மாநிலம் சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளிக்கிறது.

விபத்துக்குள்ளான இடத்திலிருந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது. விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.