ஹாங்காங்கில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ஹாங்காங்குக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு இன்று காலை ஏர் இந்தியாவின் ஏஐ315 பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருக்கிறதா என்று வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏர் இந்தியாவின் ஏஐ315 விமானமும் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு: சர்வதேச விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு!

ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!







