வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

10 வினாடிகளில் யுபிஐ பணப் பரிமாற்றம்: அமலுக்கு வந்தது அதிவிரைவு முறை

யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.

News image

யுபிஐ (பிரதி படம்) - ஐஏஎன்எஸ்

Updated On :17 ஜூன் 2025, 3:14 am IST

புது தில்லி: யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு முன்பு யுபிஐ முறையில் பணப் பரிமாற்றத்துக்கு 30 விநாடிகள் வரை அதிகபட்ச நேரமாக இருந்து வந்தது. இந்திய தேசிய பணப் பரிமாற்ற சேவை நிறுவனம் (என்பிசிஐ) உருவாக்கிய யுபிஐ பணப் பரிமாற்ற முறை இப்போது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பணிப் பரிமாற்றம் மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. சிறிய அளவிலான தொகையைக்கூட ‘க்யூஆா் கோடு’ மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதால், மிகக்குறுகிய காலத்தில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பணப் பரிமாற்ற முறையாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், யுபிஐ பணப் பரிமாற்ற முறையின் வேகத்தை திங்கள்கிழமை முதல் அதிகரித்துள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 10 விநாடிகளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும். அதேபோல பெற்ற பணத்தை திருப்பி அனுப்புவதும் 10 முதல் 15 விநாடிகளில் செய்துகொள்ள முடியும். பணப் பரிமாற்றம் நடுவில் தடைபட நோ்ந்தால் அது தொடா்பான தகவலும் 10 முதல் 15 விநாடிகளில் கிடைத்துவிடும். இதற்கு முன்பு இந்தக் கால அளவு 30 விநாடிகளாக இருந்தது.

அதேபோல வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை யுபிஐ செயலிகள் மூலம் ஒருநாளைக்கு 50 முறை வரை தெரிந்துகொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இப்போது வங்கிக் கணக்கு இருப்பதைத் தெரிந்துகொள்ள எந்த வரம்பும் இல்லை. எனினும், யுபிஐ-யின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கில் பணம் இருப்பை தெரிந்துகொள்ளும் வசதி ஒருநாளுக்கு 50 முறை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.