தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.
தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரிய தலைமையகத்தை திறந்துவைத்த அமித் ஷா, 2030-ஆம் ஆண்டுக்குள் மஞ்சள் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவதாக பேசினார்.
தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஞ்சளின் மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், மஞ்சள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் மஞ்சள் வாரியம் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Turmeric Board inaugurated by Amit Shah today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

MDMK தலைமையகம் முற்றுகை? உருட்டுக் கட்டைகளுடன் நின்ற மதிமுக தொண்டர்கள்!

ரிஷப ராசிக்கு பணவரவு.. இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 14)
மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பள்ளி திறப்பு: புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



