ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2025, 8:40 pm IST

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி கூறியதாவது, ``இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்தில் அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 இடங்களைச் சேர்க்கும் இலக்குடன், கூடுதலாக 10,000 இடங்களும் மத்திய பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம்வரை சுற்றுலா துறை பங்களிக்கிறது. மேலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

பொருளாதாரத்தில் செயல் நுண்ணறிவு மூலம் பல லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்பதால், பட்ஜெட்டில் செயல் நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிப்ரவரி 2025 அறிக்கையின்படி, 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 66 சதவிகித வளர்ச்சியுடன், 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இது மற்ற நாடுகளைவிட அதிகமானது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாளும் வெகுதொலைவில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.