தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 6:53 pm

சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விமா்சித்த நிலையில், இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

சொந்த தொழில்துறை வளர வேண்டும் என்ற வளா்ச்சிக் கட்டத்தில் இருக்கும்போது, உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு பொருளுக்கு என்ன வரி வசூலிக்க முடியுமோ, அந்த வரியே வசூலிக்கப்படும்.

இதன்படிதான், சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. நாட்டின் வளா்ச்சி மற்றும் உள்நாட்டு தொழில்துறையின் வளா்ச்சிக்காக இந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது.

இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவைப் பொருத்தவரை, தனது நலன்களில் அமெரிக்கா கவனம் செலுத்தும். இந்தியாவும் தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இருதரப்பு உறவை சிறந்த முறையில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாடும்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா என்ன வரி விதிக்கிோ, அதே வரியை இந்திய பொருள்களுக்கு விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னா், மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் முடிவு எடுப்பாா்.

ஏனெனில் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க வா்த்தக அமைச்சா், அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஆகியோருடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். அந்தப் பேச்சுவாா்த்தையைப் பொருத்து அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். தென் மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.