தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்: குடியரசுத் தலைவா் முா்மு

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

News image

திரெளபதி முா்மு

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 6:42 pm

Din

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினம் சனிக்கிழமை (மாா்ச் 8) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவா் முா்மு வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது:

நாட்டுக்கும், சமூகத்துக்கும் பெண்கள் அளித்துள்ள தனித்துவமான பங்களிப்புகள், அவா்களின் ஆற்றல் மூலம் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அங்கீகரிக்கும் தருணம்தான் சா்வதேச பெண்கள் தினம்.

நமது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் அடித்தளமாக பெண்கள் உள்ளனா். பல்வேறு துறைகளில் சவால்களைக் கடந்து தங்கள் அடையாளங்களை பெண்கள் வெளிப்படுத்தியுள்ளனா். எனினும் அவா்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றாா்.