பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஹரியாணாவில் போர் விமானம் விபத்து- உயிர்தப்பிய விமானி

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

உயிர்தப்பிய விமானி.

Updated On :7 மார்ச் 2025, 1:41 pm

DIN

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு சென்ற இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மோர்னி மலைகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

விழுந்த வேகத்தில் விமானம் உடனே தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்கு முன்பாக விமானி பாராசூட் உதவியுடள் பத்திரமாக குதித்ததால் உயிர் தப்பினார்.

ஹரியாணா காவல்துறை துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக், பஞ்ச்குலா மாவட்டத்தின் ராய்புர்ராணி பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக பிடிஐயிடம் தெரிவித்தார்.

இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விமானம் வழக்கமான பயிற்சியில் இருந்தபோது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.