தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ஹரியாணாவில் போர் விமானம் விபத்து- உயிர்தப்பிய விமானி

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

உயிர்தப்பிய விமானி.

Updated On :7 மார்ச் 2025, 7:11 pm IST

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு சென்ற இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மோர்னி மலைகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

விழுந்த வேகத்தில் விமானம் உடனே தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்கு முன்பாக விமானி பாராசூட் உதவியுடள் பத்திரமாக குதித்ததால் உயிர் தப்பினார்.

ஹரியாணா காவல்துறை துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக், பஞ்ச்குலா மாவட்டத்தின் ராய்புர்ராணி பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக பிடிஐயிடம் தெரிவித்தார்.

இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விமானம் வழக்கமான பயிற்சியில் இருந்தபோது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று அந்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.