விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

மாதம் ரூ.55 செலுத்தினால், ரூ.3,000 மாத ஓய்வூதியம் பெறும் திட்டம்!

மாதம் ரூ.55 செலுத்தினால், ரூ.3,000 மாத ஓய்வூதியம் பெறும் திட்டம்!

News image

ஓய்வூதியம்

Updated On :8 மார்ச் 2025, 6:01 pm IST

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.55 செலுத்தினால், அவர்களது ஓய்வு வயதை எட்டியபிறகு மாத ஓய்வூதியமாக ரூ.3,000 பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில்தான் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களது ஓய்வுக்காலத்தில், குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் திட்டம்.

இந்த திட்டம் தற்போது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இதில், சாலையோர வியாபாரிகள், தினக்கூலிகள், தொழிலாளிகள் என எந்தவிதமான பணப்பாதுகாப்பும் இல்லாத தொழில்களில் இருப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு, ஒரு தொழிலாளி மாதம் ரூ.55 செலுத்தி வர வேண்டும். பிறகு அவர்கள் ஓய்வு வயதை அடையும்போது, அவர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

குப்பை பொறுக்குவோர், சலவைத் தொழில், ரிக்சா ஓட்டுபவர்கள், தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்வோர், கட்டடத் தொழிலாளர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த திட்டத்தின் கீழ், ஒருவர் ரூ.200 மாதந்தோறும் செலுத்தி வந்தால், ஓய்வூதியத் தொகையில் அவர்களது தொகை வைப்பு வைக்கப்பட்டுவிடும்.

இதன்படி, ஒரு தொழிலாளர் தனது 18 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் குறைந்தபட்ச தொகையான ரூ.55 செலுத்தலாம். ஒருவேளை 29 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். இப்படி வயதுக்கு ஏற்ப மாதத் தவணை அதிகரிக்கும். இந்த திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செலுத்திய தொகை மற்றும் ஆண்டுக்கு ஏற்ப இவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது ஜன் தன் வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து இந்த திட்டத்தில் இணைய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.