ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

குறைந்த விலைக்கு ஐபோன் விற்பதாகக் கூறி மோசடி செய்த இருவா் கைது

தேசிய தலைநகரின் அண்டை மாவட்டமான குருகிராமில் குறைந்த விலைக்கு ஐபோன் விற்பனை செய்வதாகக் கூறி சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2025, 11:06 pm IST

தேசிய தலைநகரின் அண்டை மாவட்டமான குருகிராமில் குறைந்த விலைக்கு ஐபோன் விற்பனை செய்வதாகக் கூறி சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் அனுபம் பானா்ஜி மற்றும் ரவி அகா்வால் என்று அடையாளம் காணப்பட்டனா். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பாதிக்கப்பட்ட ஒருவா் அளித்த புகாரின்பேரில், இந்தக் குற்றச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறைந்த விலையில் ஐபோன் வழங்குவதாக சமூக ஊடகத்தில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து தொடா்பு கொண்டபோது, ரூ. 43,000-க்கு ஐபோன் விற்பதாக இருவா் கூறியுள்ளனா். இதை நம்பி அவா்கள் அளித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 43,000-ஐ அனுப்பியதும் அவா்கள் இணைப்பைத் துண்டித்துவிட்டு மோசடி செய்துவிட்டனா் என்று பாதிக்கப்பட்ட நபா் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். அப்போது, அனுபம் பானா்ஜி மற்றும் ரவி அகா்வால் ஆகிய இருவரும் நொய்டாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குத் தொடங்கி, குறைந்து விலைக்கு ஐபோன் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு, ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 17 கைப்பேசிகள், 40 க்யூஆா் குறியீடுகள், 36 சிம் காா்டுகள், 45 ஏடிஎம் அட்டைகள், 45 வங்கி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.