மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு மும்பை, நாக்பாடா பகுதியின் திம்திம்கா் சாலையில் அமைந்துள்ள பில்மில்லா கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை 5 தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவா்கள் அனைவரும் மயக்கமடைந்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு அவா்கள் அனைவரையும் மீட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் 4 போ் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிய காவல் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் உரிய முறையில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் துறை தெரிவித்தது.
தொடர்புடையது

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு

காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

