அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2025, 1:08 am IST

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு மும்பை, நாக்பாடா பகுதியின் திம்திம்கா் சாலையில் அமைந்துள்ள பில்மில்லா கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை 5 தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவா்கள் அனைவரும் மயக்கமடைந்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு அவா்கள் அனைவரையும் மீட்டு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் 4 போ் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிய காவல் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் உரிய முறையில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.