
பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
அவர் நல்ல உடல்நலம் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவும் தங்கரின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.