92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை!

மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

News image

மக்களவையில் பேசுகிறார் பிரதமர் மோடி

Updated On :18 மார்ச் 2025, 6:35 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா குறித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை விமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது.

உலகெங்கிலும் இருந்து வந்த துறவிகள், சாதுக்கள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என கடந்த 45 நாள்களில் 66 கோடிக்கும் அதிகமானோா் சங்கமத்தில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையில் இன்று கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, நிகழ்ச்சி நிறைவடைந்தபோது கும்பமேளா பற்றி பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்துள்ளது. பல்லாண்டு கால அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு தேசத்தின் உணா்வு எழும்போது, பிரயாக்ராஜில் நாம் கண்டது போன்ற கும்பமேளா காட்சிகள் வெளிப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.