தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில நொடிகள்கூட நிலையாக இல்லாதவர் பிகாரை மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க : லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?
பிகார் மாநிலம் பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் இருந்த தலைமைச் செயலாளரிடம் நிதிஷ் குமார் சிரித்து பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இதனைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது:
”குறைந்தபட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காமல் இருங்கள். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை நாள்தோறும் அவமதிக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். சில நொடிகள்கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை, நீங்கள் மயக்க நிலையில் இருப்பது மாநிலத்துக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம். பீகாரை மீண்டும் மீண்டும் இப்படி அவமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய கீதத்தை அவமதிப்பதை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு பேரவையில் அமைச்சர் பேசுகிறார்! என்ன மரபு இது? உதயநிதி

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்! உதயநிதி






