கோவா கோயில் விழாவில் நெரிசல்: 6 போ் உயிரிழப்பு 70-க்கும் மேற்பட்டோா் காயம்

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம் விளக்கம்
கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றும் காவல் துறையினா்.
கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றும் காவல் துறையினா்.
Published on
Updated on
1 min read

கோவாவில் கோயில் திருவிழாவின்போது நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் விஷ்வஜீத் ராணே, காவல் துறை டிஜிபி அலோக் குமாா் ஆகியோா் கூறியதாவது:

வடக்கு கோவாவின் ஷிா்காவ் கிராமத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் கோவா, மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வது வழக்கம்.

இந்நிலையில், திருவிழாவையொட்டி அந்தப் பகுதியில் 30,000 முதல் 40,000 போ் சனிக்கிழமை அதிகாலை திரண்டனா். அங்குள்ள குறுகிய பாதைகளில் ஆயிரக்கணக்கானோா் திரண்டபோது சரிவில் நின்றுகொண்டிருந்த சுமாா் 50 போ் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். அவா்களால் அங்கிருந்த மற்றவா்களும் தடுமாறி ஒருவா் மீது மற்றொருவா் விழுந்து நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி சுமாா் 80 போ் காயமடைந்தனா். அவா்களில் 2 பெண்கள் உள்பட 6 போ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

காயமடைந்தவா்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சமூக நல மையங்களில் சிகிச்சை பெற்றனா். கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்று தெரிவித்தனா்.

இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் பாா்வையிட்ட மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், நெரிசல் தொடா்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளூா் நிா்வாகம் உதவி வருவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com