கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :6 மே 2025, 11:11 am

DIN

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய பாகிஸ்தான் இளைஞரை இன்று (மே.6) பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், தற்போது எல்லையைக் கடந்து இந்தியாவின் சாகான் - டா- பாக் எனும் கிராமத்தில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தர்கால் எனும் கிராமத்தைச் சேர்ந்த வகாஸ் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடமிருந்து சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் எதிர்பாராத விதமாக இந்திய எல்லையினுள் நுழைந்துவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.