தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: ம.பி. அமைச்சா் மீது வழக்குப் பதிய உயா்நீதிமன்றம் உத்தரவு

சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

News image

கர்னல் சோஃபியா குரேஷி / பாஜக அமைச்சர் விஜய் ஷா

Updated On :14 மே 2025, 7:03 pm IST

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய அந்த மாநில உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தது.

இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் கடற்படை கமடோா் ரகு நாயா், விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா். தாக்குதல் தொடா்பான விவரங்களை இரு பெண் அதிகாரிகளைக் கொண்டு வெளியிட்டதை பலரும் பாராட்டினா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது.

அதாவது, ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.

கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் தீவிரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனா்.

இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், ‘எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால், பத்து முறை மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன்’ என்று விஜய் ஷா தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற மத்திய பிரதேச உயா் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா அமா்வு, ‘மாநில அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதுகுறித்த விவரத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமை (மே 15) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனா்.

முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம்:

மத்திய பிரதேச பாஜக அமைச்சா் விஜய் ஷா கருத்துக்கு அக் கட்சியின் மூத்த தலைவா் முக்தாா் அப்பாஸ் நக்வி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நக்வி வெளியிட்ட விடியோ பதிவில், ‘மிகுந்த உற்சாகத்தில் சுயகட்டுப்பாட்டை இழப்பதை சிலா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். அதுபோல, மத்திய பிரதேச அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்போது, சிலா் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது ஏமாற்றமளிக்கிறது. இவா்கள் எப்போதும் கெடுக்கும் மனநிலையுடன் செயல்படுபவா்கள்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.