எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

200MP கேமராவுடன் புதுவரவாக 3 மொபைல்கள்! எதை வாங்கலாம்?

200MP கேமராவுடன் புதுவரவாக வந்துள்ள 3 மொபைல்கள் பற்றி...

News image
Updated On :27 மே 2025, 5:06 pm IST

200MP கேமராவுடன் மூன்று புதிய மொபைல்களை புதுவரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பம்சங்கள் விலை விவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.

அதிகமான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து ரசிப்பவராக இருந்தால் அவர்களுக்கெனவே 200 மெகா பிக்சல்களுடன் மூன்று புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. DSLR கேமராக்களின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில், மொபைல் போனிலேயே புகைப்படங்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகமான புகைப்படங்கள் எடுப்பவர் மட்டுமின்றி, சமூகவலைதளங்களில் அதிகமான நேரம் செலவிடுபவர், கேமிங்கில் ஆர்வமிக்கவர் என்றால் இந்த மூன்று போன்களும் அவர்களுக்கு அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா - Samsung Galaxy S25 Ultra

முதலாவதாக பார்க்கப்போவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், 200MP-யில் முதன்மை கேமராவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தெளிவாகவும் துல்லியமாகவும் படம் எடுக்க உதவும். அதேபோன்று டெலிபோட்டோ மற்றும் அல்ட்ரா வைடாக முறையே 50MP மற்றும் 10MP கேமராவும், செல்ஃபிக்கு 12MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 12 ஜிபி உள் நினைவகத்துடன் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை; ரூ.103,999-ல் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - Samsung Galaxy S24 Ultra

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் மலிவுவிலை பதிப்பான இந்த எஸ்24 எந்தவிதத்திலும் எஸ்25 -க்கு சலித்தது இல்லை என்ற வகையில் தனது செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

அதைப் போலவே 200MP-யில் முதன்மை கேமரா, செல்ஃபி கேமராக்கள், மற்ற கேமராக்கள், 5000 mAh பேட்டரி என ஒத்த வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அளவில் 6.8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.1,34,999 என கொடுக்கப்பட்டிருந்தாலும், 33 சதவிகித தள்ளுபடி விலையில் ரூ.89,989-க்கும் பெற்றுக் கொள்ளலாம்.

ரெட்மி நோட் 13 புரோ - Redmi Note 13 Pro

மிகக்குறைந்த விலையில் 200MP-யில் முதன்மை கேமராவுடன் ரூ.25,000-க்கு குறைவாக வாங்க விரும்புவர்களுக்கு இந்த மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த போன் குறைந்த விலையில் பிரீமியம் அனுபவத்தைத் தருகிறது.

6.67 அங்குலத் திரையுடன் 5000 mAh பேட்டரி திறனில் நாள் முழுவதும் நீடிக்கும் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.18,000-லிருந்து தொடங்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.