நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? - மோடிக்கு மமதா சவால்

மேற்குவங்க அரசை விமர்சித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மமதா பானர்ஜி பதில் கருத்து.

News image

ANI

Updated On :29 மே 2025, 6:09 pm IST

தன்னுடன் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் அலிபர்துவார் பகுதியில் எரிவாயு திட்டத்தைத் தொடக்கிவைத்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற முர்ஷிதாபாத், மால்டா வன்முறைகள் மாநில அரசின் அராஜகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம்" என்று மேற்குவங்க அரசை கடுமையாக சாடினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி, 'இதுகுறித்து என்னுடன் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்க வாருங்கள், நீங்கள் உங்கள் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வரலாம்' என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் தைரியம் இருந்தால் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

"தேச நலனைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வரும் நிலையில், மத்திய அரசு 'அரசியல் ஹோலி' விளையாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி இன்று பேசியது அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. கேட்பதற்கே துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி எப்படி கூறலாம்?. அப்படி பேச வேண்டிய நேரம் இதுதானா? இப்படி பேசுபவர் பிரதமராக இருக்கத் தகுதியில்லை. பிரதமர் மோடி பொய்களையே கூறுகிறார். நாட்டை கொள்ளையடிக்கிறார்.

இவ்வாறு பேசியதன் மூலம் மேற்குவங்கத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். மாநில மக்களை அவமதித்துள்ளார். அப்படியெனில் நாளைக்கே மேற்குவங்கத்தில் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நான் கருத்து தெரிவிக்கமாட்டேன் ஆனால் ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். அரசியல் லாபத்திற்காகவே மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளது.

உலக நாடுகளுக்குச் சென்ற எம்.பி.க்கள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஒருவராக இருக்கும் நிலையில் பிரதமர் எதிர்க்கட்சியையும் மாநில அரசுகளையும் குறை கூறுவதில் மும்முரமாக இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.