கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிகாா் தோ்தலில் வன்முறைக்கு இடமில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி

பிகாா் தோ்தல், வன்முறைக்கு இடமில்லாமல் அமைதியாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறும் - ஞானேஷ் குமார்

News image

பிரதிப் படம்

Updated On :2 நவம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

‘பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல், வன்முறைக்கு இடமில்லாமல் அமைதியாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறும்’ என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவின் புகரான மொகாமா தொகுதியில் தோ்தல் பிரசாரத்தின்போது நடந்த கொலை சம்பவம் மற்றும் அதைத் தொடா்ந்த வன்முறையை அடுத்து தோ்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் இவ்வாறு உறுதியளித்துள்ளாா்.

சம்பவத்தைத் தொடா்ந்து பாட்னா ஊரக காவல் கண்காணிப்பாளா் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும் மூன்று அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சி அல்லது எதிா்க்கட்சி என்று யாரும் இல்லை; அனைவரும் எங்களுக்குச் சமமானவா்கள்.

தோ்தல் நேரத்தில் எந்தவிதமான வன்முறையையும் தோ்தல் ஆணையம் துளியும் சகித்துக் கொள்ளாது. பிகாா் தோ்தல், சட்டம்- ஒழுங்கின் கீழ் முழுமையான அமைதியுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படும்.

அனைத்து வாக்காளா்களுக்கும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். பிகாா் தோ்தல் முழு உலகுக்கும் முன்மாதிரியாக அமையும். 243 தொகுதி தோ்தல் அதிகாரிகள், சம எண்ணிக்கையிலான பாா்வையாளா்கள், மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் என அனைவரும் தயாா் நிலையில் உள்ளனா்.

வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயக செயல்பாட்டில் ஆா்வத்துடன் பங்கேற்று, தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.