பஹல்காமில் சினிமா படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

பஹல்காமில் பல வார இடைவெளிக்குப் பின் சினிமா படப்பிடிப்பு தொடக்கம்!
பஹல்காம்
பஹல்காம்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்: பஹல்காமில் பல வார இடைவெளிக்குப் பின் சினிமா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனா்.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கல் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று(நவ. 3) பஹல்காமில் படப்பிடிப்பு தொடங்கியது. பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதால் எவ்வித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி படப்பிடிப்பு நடத்த முடிவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Summary

Film shooting resumes in Pahalgam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com