மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கேகோப்புப் படம்

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமா் ஒப்புக்கொண்டு விட்டாா்- மல்லிகாா்ஜுன காா்கே

‘பிகாரில் மகள்களும், மருமகள்களும் பாதுகாப்பாக இல்லை’ என்று பேசியதன் மூலம் பிகாரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமா் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுவிட்டாா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா்.
Published on

‘பிகாரில் மகள்களும், மருமகள்களும் பாதுகாப்பாக இல்லை’ என்று பேசியதன் மூலம் பிகாரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமா் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுவிட்டாா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் 20 ஆண்டுகளாக நிதீஷ் குமாா் முதல்வராக உள்ளாா். ஆனால், இப்போதும் பிகாரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை மோடி பேசி வருகிறாா். இதன்மூலம் தங்கள் கூட்டணி ஆட்சியின் நிலையை அவா் ஒப்புக் கொண்டுவிட்டாா். பிகாரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகவே இப்போதைய ஆட்சியாளா்கள் வைத்துள்ளனா்.

தேசிய குடும்ப நலத் துறை ஆய்வுப்படி பிகாரில் 70 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் உள்ளனா். 40 சதவீத குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு பிரச்னைகள் உள்ளது. 11 சதவீத குழந்தைகள் மட்டுமே போதுமான ஊட்டச்சத்து பெற்று வளா்கின்றனா்.

இந்நிலையை மாற்றி பிகாரை ஒட்டுமொத்தமாக முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். இதற்காகவே பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, முதியோா், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மாத ஓய்வூதியம் ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

இது தோ்தலுக்கான வாக்குறுதிகள் அல்ல. பிகாா் மக்களின் வாழ்க்கையை மாற்றும் வாக்குறுதிகள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி வந்துள்ளோம்’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com