12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிக்கப்பட்டது குறித்து...

கோப்புப் படம்

Published On :

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், நக்சல்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம், பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில், ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கொயிமெண்டா - எராபள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் சூரிய ஒளி மின்சாரம் மூலம் செயல்பட்டு வந்ததாகவும்; அங்கிருந்து, 17-க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த உற்பத்திக்கூடத்தில் இருந்து ஏராளமான இயந்திரங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து ஆயுதம் செய்ய தேவையான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, சத்தீஸ்கரின் சுக்மா உள்ளிட்ட பஸ்தார் பகுதியில், நிகழாண்டில் (2025) மட்டும் நக்சல் அமைப்பின் பொதுச் செயலர் நம்பாலா கேஷவ் ராவ் உள்பட 249 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

A Naxal weapons and explosives manufacturing facility has been destroyed by security forces in Chhattisgarh's Sukma district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.