தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிக்கப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :4 நவம்பர் 2025, 5:06 pm IST

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், நக்சல்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம், பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில், ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கொயிமெண்டா - எராபள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் சூரிய ஒளி மின்சாரம் மூலம் செயல்பட்டு வந்ததாகவும்; அங்கிருந்து, 17-க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த உற்பத்திக்கூடத்தில் இருந்து ஏராளமான இயந்திரங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து ஆயுதம் செய்ய தேவையான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, சத்தீஸ்கரின் சுக்மா உள்ளிட்ட பஸ்தார் பகுதியில், நிகழாண்டில் (2025) மட்டும் நக்சல் அமைப்பின் பொதுச் செயலர் நம்பாலா கேஷவ் ராவ் உள்பட 249 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

A Naxal weapons and explosives manufacturing facility has been destroyed by security forces in Chhattisgarh's Sukma district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.