பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

பிகாரில் பெண்களைப் பயத்திலிருந்து மீட்டெடுத்தது என்டிஏ அரசு..
ஸ்மிருதி ராணி
ஸ்மிருதி ராணி
Published on
Updated on
1 min read

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களைப் பயத்திலிருந்து மீட்டெடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஸ்மிருதி ராணி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிகாரில் பெண்கள் நலத்திட்டங்களின் பலன்களை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆர்ஜேடி முறையிட்டது குறித்து வேதனை அளிக்கின்றது.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பிகாரில் 3 கோடிக்கும் அதிகமான பெண்களும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 1.16 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படுவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். ஒருபுறம் பிகாரில் உள்ள பெண் பயனாளிகளின் கணக்குகளுக்கு என்டிஏ அரசு நேரடியாகப் பணத்தை மாற்றுகிறது என்பது வேதனையான விஷயம், மறுபுறம் ஆர்ஜேடி தலைவர்கள் சலுகைகளை நிறுத்த தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிவை வழங்கியுள்ளனர்.

அக்டோபர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் பெண்களுக்கு பணத்தை மாற்றுவதன் மூலம் பிகார் அரசு மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி அக். 31 அன்று ஆர்ஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார் என்று அவர் கூறினார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும், அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறுகிறது.

Summary

Former Union minister and BJP leader Smriti Irani on Tuesday asserted that the NDA government in Bihar uplifted women from the shadow of helplessness and fear.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com