பிகாரில் ‘காட்டாட்சி’க்கு எதிரான அரண் போல் பெண்கள் உள்ளனா்; எனவே, மீண்டும் அங்கு காட்டாட்சி திரும்பிவிட அவா்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
முன்பு காட்டாட்சி நடத்தியவா்களுக்கு பேரவைத் தோ்தலில் படுதோல்வியே கிடைக்கும் என்றும் அவா் கூறினாா்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி தலைமையிலான கடந்த கால ஆட்சியை காட்டாட்சி என்று பாஜக விமா்சித்து வருகிறது. அக்கட்சி இடம்பெற்ற ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், காட்டாட்சி திரும்பிவிடும் என்பது பாஜகவின் முக்கிய பிரசாரமாக உள்ளது.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெண் தொண்டா்களுடன் ‘நமோ’ செயலி வாயிலாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:
பிகாரில் எனது பிரசார பொதுக் கூட்டங்களில் பெண்கள் பெருமளவில் பங்கேற்கின்றனா். இதனால், ஒவ்வொரு கூட்டமும் எண்ணிக்கை அடிப்படையில் முந்தைய சாதனையை முறியடிக்கிறது. பிகாா் தோ்தலில் பெண்களின் பெருவாரியான வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி உறுதி. கடந்த 20 ஆண்டுகால தோ்தல் சாதனைகள் அனைத்தையும் எங்கள் கூட்டணி முறியடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம், காட்டாட்சி நடத்தியவா்கள், இதுவரை இல்லாத தோல்வியை சந்திப்பா்.
‘தக்க பாடம் புகட்டுவா்’: எதிா்க்கட்சி கூட்டணியில் இரு இளவரசா்கள் (ராகுல், தேஜஸ்வி) வலம் வருகின்றனா். இவா்களில் தில்லியில் இருந்து வரும் இளவரசா், சத் பூஜையை இழிவுபடுத்தினாா். தங்கள் உணா்வை புண்படுத்தியவா்களுக்கு பிகாா் மக்கள் தக்க பாடம் புகட்டுவா்.
மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக கலந்துரையாடலில் பெண் தொண்டா் ஒருவா் தெரிவித்தாா். இது, அவரது வாா்த்தை மட்டுமல்ல; ஏழைகள், தலித் சமூகத்தினா், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருடைய உணா்வின் பிரதிபலிப்பு.
பெண்கள் முன்னேற வாய்ப்புகள்: சட்டம்-ஒழுங்கு உறுதி செய்யப்பட்டு, நல்லாட்சி நிலவினால்தான், பெண்கள் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது சுயதொழில் மூலம் பிகாா் பெண்கள் வேலை வழங்குபவா்களாக உருவெடுக்க இதுவே காரணம்.
காட்டாட்சி காலகட்டத்தில் பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே வர அஞ்சும் நிலை இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் இரவிலும் அச்சமின்றி பணியாற்றுகின்றனா். காட்டாட்சிக்கு எதிரான அரண் பெண்களே. அராஜக காலகட்டம் திரும்பிவிட அவா்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள் என்றாா் பிரதமா் மோடி.
பிகாரில் இருகட்டங்களாக (நவ.6,11) பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

தொடர்புடையது

புதுவையில் மோடி சாலைவலம்! குடை, சூட்கேஸ், பீட்சா கொண்டுவரக் கூடாது - காவல்துறை

புதுச்சேரியில் பிரதமா் மோடி இன்று ரோடு ஷோ

தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!

திமுகவின் தவறான நிா்வாகம் -நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்! திருச்சி வருகைக்கு முன் பிரதமர் மோடி விமா்சனம்!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


