இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இளைஞா்களை சமூக ஊடக ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமா் மோடியின் விருப்பம்; அப்போதுதான், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து அவா்களைத் திசைதிருப்ப முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ஒளரங்காபாத் பக்கா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி.









